ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்ற மிகப்பெரிய அளவிலான சிறைக்கதிகள் பரிமாற்றத்தில் ராணுவ வீரர்கள், மக்கள் என 400 பேர் விடுவிக்கப்பட்டனர். போர் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக கடந்த வாரம் துருக்கியில் ரஷ்யா - உக்ரைன் அதிகாரிகள் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தியதில், கைதிகள் பறிமாற்றத்திற்கு இருநாட்டு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இருதரப்பிலும் தலா 400 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் அடுத்தடுத்த கட்டங்களில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.