அரசுமுறை பயணமாக மலாவி நாட்டுக்கு சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கு இந்திய வம்சாவளியினரை சந்தித்து கலந்துரையாடினார். மலாவி நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி என்பதில் பெருமை கொள்வதாக கூறிய அவர், இருநாடுகளுக்கு இடையிலான அரசியல் உறவு ஏழு ஆண்டுகளை நிறைவு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.