ஜம்மு காஷ்மீர் எல்லையில் 8-வது நாளாக பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நேற்று இரவு எல்லையின் பல்வேறு பகுதிகளில் சிறியரக ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பூஞ்ச், குப்வாரா, பாரமுல்லா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால், எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி தர ஆயுத்தமாக உள்ளதாக கூறப்படுகிறது.