நாட்டின் நிதி நெருக்கடியை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தாங்கள் யாசகம் கேட்டு போவதை சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளே விரும்பவில்லை என கூறினார். குவெட்டாவில் பாகிஸ்தான் இராணுவ வீரர்களிடம் பேசிய ஷெரீப், பொருளாதார சவால்களை எதிர்க்கொள்ள இயற்கை மற்றும் மனிதவளத்தை முழுமையாக பயன்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஷெரிப், சீனாவை காலத்தால் சோதிக்கப்பட்ட நண்பர் என்றும், சவுதி அரேபியாவை நம்பகமான நட்பு நாடு என்றும் கூறினார்.