இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த தாங்கள் திட்டமிடவில்லை என பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார், தற்காப்புக்காக தாக்குதல்களைத் தொடங்குவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்றும், தாக்குதலை வான்வழியாகவும் தரைவழியாகவும் முறியடிக்கப்படுவதை தாங்கள் உறுதியாக நம்பியதாகவும் தெரிவித்தார்.