வடகொரியா அதன் கிழக்கு கடற்கரையில் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. வட கொரியா மற்றும் தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வரும் நிலையில், வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு தென் கொரியாவையும், அமெரிக்காவையும் மிரட்டி வருகிறது. கடந்த மார்ச் மாதம் தென் கொரியா மற்றும் அமெரிக்க துருப்புக்கள் தங்களது பெரிய வருடாந்திர ஒருங்கிணைந்த பயிற்சிகளைத் தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, வடகொரியா கடலுக்குள் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. முன்னதாக அந்தப் பயிற்சியை இராணுவ மோதலின் அபாயங்களை அதிகரிக்கும் ஆபத்தான ஆத்திரமூட்டும் செயல் என்று வடகொரியா கூறியிருந்தது.