காஷ்மீரின் ராம்பனில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் கார் உள்ளிட்ட வாகனங்கள் மண்ணில் புதைந்தன. மேகவெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், சாலைகளை மூடிய பாறை குவியல்களுக்கு மத்தியில், கார்கள், லாரிகள், ஆம்புலன்சுகள் புதைந்து சேதமடைந்துள்ளன.