காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் விமான படை புதிதாக நடத்திய தாக்குதலில், 146 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். ஆனால், 459 பேர் காயமடைந்திருப்பதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசா மீது புதிதாக தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.