சிங்கப்பூர் பிரதமர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற லாரன்ஸ் வாங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவும், சிங்கப்பூரும் வலுவான உறவை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் லாரன்ஸ் வாங்குடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.