காசாவின் ரஃபா பகுதியில் உள்ள காசா மனிதநேய அறக்கட்டளையின் நிவாரண பொருட்கள் விநியோக கூடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றும், காயமடைந்த பாலஸ்தீனியர்கள் காசாவின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.