காசா மீது தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொல்வதை நிறுத்தவில்லை என்றால், இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. காசா மீது புதிய ராணுவ தாக்குதல்களை துவக்கி அதன் வாயிலாக ஒட்டுமொத்த காசாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போவதாக இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாகு தெரிவித்துள்ளார். சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறி இஸ்ரேல் காசாவை தாக்குவதுடன், அங்குள்ள அப்பாவி மக்களுக்கான மனிதாபிமான உதவிகளையும் தடுப்பதாக இந்த மூன்று நாடுகளும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. மேற்கு கரையில் யூதர்களின் குடியேற்றத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் தேவைப்பட்டால் இஸ்ரேல் மீது தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.