இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவும் சூழலில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 2024 ஆகஸ்டில் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இந்தியா வந்துள்ள அவர், இரு நாடுகளுக்கு இடையிலான 20வது கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்தியா - ஈரான் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தான 75-ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் நடைபெறும் இந்த உயர்மட்ட கூட்டத்தில், முக்கிய இருதரப்பு விவகாரங்கள், அரசியல், பொருளாதாரம் மற்றும் உத்திசார் தளத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.