காசா பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈரானும், இஸ்ரேலும் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 60 நாள் போர் நிறுத்தத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. இந்த விதிமுறைகளுக்குக் இஸ்ரேல் கட்டுப்படுவதாகக் கூறியது. ஆனால் ஹமாஸ் அந்தத் திட்டத்தை நிராகரித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் பணயக்கைதிகளுக்கான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக கூறிய டிரம்ப் காசாவுடன் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். பணயக்கைதிகள் பரிமாற்றத் திட்டத்தில் 28 இஸ்ரேலியர்கள், 1236 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுவர்.