இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பகையின் அளவு நல்ல விஷயம் அல்ல என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான போர்நிறுத்தத்தை "பெரிய வெற்றி" என்று விவரித்தார். வளைகுடா பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பியுள்ள அவர், இந்தியா - பாகிஸ்தான் போரை தாம் தலையிட்டு நிறுத்தியதாக மீண்டும் கூறியுள்ளார்.