இஸ்ரேல் மீது ஹவுதி நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சியை தொடர்ந்து, ஜெருசேலம் நகரில் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். காசாவில் போர் நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வீசிய ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.