பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் புழுதிப் புயலுடன் பெய்த கனமழையால் 8 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில், புழுதி புயல் வீசிய நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் மரங்களும், மின் தகடுகளும் சேதமடைந்தன. இதனால் 8 பேர் உயிரிழந்த நிலையில், 45 பேர் காயமடைந்தனர். இதனிடையே மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்தது.