கியூபாவின் முன்னாள் வாட்டர் போலோ வீரரான ஜோன் லெஃபோன்ட் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.தண்ணீரில் மிதந்துக்கொண்டே தனது தலையில் கால்பந்தை சமநிலைப்படுத்தி புதிய உலக சாதனை படைத்தார். ஹவானா நகர மையத்தில் உள்ள நீச்சல் குளத்தில் இந்த சாதனையை அவர் செய்தார். 37 வயதான லெஃபோன்ட், 31 நிமிடங்கள் மற்றும் ஒரு வினாடி பந்தை தனது தலையில் கட்டுப்படுத்தி நைஜீரிய டோனி சாலமனின் சாதனையை முறியடித்தார். சாலமன் 28 நிமிடங்கள் 34 வினாடிகள் பந்தை தனது தலைக்கு மேல் கட்டுப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.