காசாவில் போர் பதற்றத்தால் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ள மக்கள் பட்டினி பிடியிலும் சிக்கி கொண்டுள்ளனர். உணவுப்பொருட்கள் இல்லாமல் அவதிப்படும் மக்கள் தங்கள் பசியை போக்குவதற்காக கெட்டுப்போன மாவை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் பசியால் சாகுவதை விட கெட்டுபோனதை உட்கொள்வது நல்லது என வேதனையுடன் காசா மக்கள் தெரிவிக்கின்றனர்.