பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சபலென்கா, இறுதி போட்டிக்கு முன்னேறினார். பாரீசில் நடைபெற்ற அரையிறுதி சுற்றில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7க்கு 6, 6க்கு 4, 6க்கு 0 என்ற கணக்கில் வென்றார்.