அரசியல் ஆதாயத்திற்காக காசா மீதான தாக்குதலை நீட்டித்துக் கொண்டே செல்வதா? என இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பி அய்மன் அட்டா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனிநாடாக உருவான போது ஏற்பட்ட நக்பா பேரழிவை சுட்டிகாட்டி, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அவரது பேச்சுக்கு மற்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அய்மன் அட்டாவை நாடாளுமன்ற காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.