ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 10 பேர் உயிரிழந்த நிலையில், 260 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த பலரும் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதனிடையே நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.