அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 130 ஆண்டுகள் மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம் நிகழ்ந்துள்ளது. சுமார் 160 கிலோ மீட்டர் நீளமுள்ள துலேர் ஏரி, கடும் உறைபனி காரணமாக உறைந்து 130 ஆண்டுகளாக காணாமல் போனது. இந்த நிலையில், தற்போது அங்கு நிலவி வரும் வெப்பத்தின் காரணமாக உறைபனிகட்டிகள் உருகி நீர்வரத்து சீரானதால், ஏரியில் உள்ள நீர் கடல் போல் காட்சி அளிக்கிறது.