தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்குள்ள மக்கள் கூடுதலாக ஒரு பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஹாங்காங்கின் சுகாதார பாதுகாப்பு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,மே 3 ஆம் தேதியோடு முடிந்த காலகட்டத்தில் கொரோனா தொற்று 28 சதவிகிதம் அதிகரித்து 14 ஆயிரத்து 200 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 30 சதவிகிதம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.