மிசோரமில் பலத்த காற்றுடன் இடைவிடாது வெளுத்து வாங்கிய கனமழையால் கட்டடங்கள் இடிந்து சேதமாயின. வட கிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மிசோரமில் வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் மின்கம்பங்களும் சாய்ந்து சேதமாயின. இதனிடையே அங்கு மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகின்றது.