அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக வங்கதேச அரசின் இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவித்த நிலையில், அவரை ராணுவ மற்றும் விமான படை தளபதிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். படைத்தளபதிகளுடனான சந்திப்பு குறித்து விளக்கமளித்துள்ள வங்க தேச அரசு, பக்ரீத் வாழ்த்து தெரிவிக்கவே ராணுவ மற்றும் விமானப்படை தளபதிகள் குடும்பத்துடன் சந்தித்ததாக கூறியுள்ளது. ஆனால், பொதுத்தேர்தலை வரும் டிசம்பர் மாதமே நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.