அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம் வலுத்ததையடுத்து மேலும் 2 ஆயிரம் தேசிய படை வீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 44 பேரை கைது செய்ததை கண்டித்து லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம் வெடித்தது. மேலும் அதிபர் ட்ரம்பை கண்டித்து மக்கள் பேரணியாகவும் சென்ற நிலையில் போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு ஏற்கனவே 2 ஆயிரம் தேசியபடை வீரர்கள் அனுப்பப்பட்ட நிலையில் மேலும் 2 ஆயிரம் வீரர்களை ட்ரம்ப் அனுப்பியுள்ளார்.