குஜராத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள பல்துறை புலனாய்வுக் குழுவை இந்தியாவிற்கு அனுப்ப இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா தலைமையில் விசாரணை நடத்த இந்த குழு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம், குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இங்கிலாந்தைச் சேர்ந்த 53 பேர் உயிரிழந்தனர்.