போர் நிறுத்த அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க மறுத்தால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார். இது தொடர்பாக செனட் வெளியுறவுக்குழு முன்பு பேசிய அவர், அமைதிப் பேச்சுவார்த்தை விஷயத்தில் ரஷ்யா காலம் தாழ்த்தி வருவது அதன் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார். போர்நிறுத்தத்தை எட்டுவதற்கான விதிமுறைகளை ரஷ்யா வகுக்கும் என தாங்கள் நம்பி காத்திருப்பதாகவும், ஒருவேளை ரஷ்யா அமைதியை விரும்பாமல் போரை தொடர முயற்சித்தால் கூடுதல் பொருளாதார தடைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.