இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் குறித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் எந்தவித முடிவும் எடுக்காமல் முடிந்தது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் பேசிய ஐ.நா.சபைக்கான பாகிஸ்தானின் பிரதிநிதி அசிம் இப்திகார் அகமது, இந்தியாவிற்கு எதிராக தவறான கூற்றுக்களைப் பரப்பியதாகவும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை திசை திருப்பும் முயற்சியில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.