திபெத்தில் 5.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திங்கட்கிழமை அதிகாலை 2.41 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், நாடு முழுவதும் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. திபெத்தில் கடந்த சில நாட்களாக அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த மே 9ஆம் தேதி 3.7 ரிக்டர் அளவிலும், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 3.9 மற்றும் 3.6 ரிக்டர் அளவுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.