மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஐ.எஸ். பங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான கூட்டணி ஜனநாயக படை நடத்திய பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 89 பேர் கொல்லப்பட்டனர். பல்வேறு கிளர்ச்சி குழுக்களும், பயங்கரவாத அமைப்புகளும் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. வடக்கு கிவு மாகாணத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். உயிரிழந்த அப்பாவி மக்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பொதுமக்களின் மீதும் தாக்குதல் அரங்கேறியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.