மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுத்தமாலாவில் உள்ள பியூகோ எரிமலை வெடித்து சிதறியதால் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எரிமலை வெடித்து சிதறியதால் தீக்குழம்புகள் மற்றும் பைரோகிளாஸ்டிக் என்ற திடமான பாறை துண்டுகள் 7 கிலோ மீட்டர் வரை பரவியுள்ளது. இதோடு சாம்பல் புகையும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வெளியேறி வருகிறது. இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள நகரங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறினர்.