ஆப்கானிஸ்தான் எல்லையில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இதன் அதிர்வு காஷ்மீர், டெல்லி-என்சிஆரில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் மதியம் 12:17 மணிக்கு 130 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதன் தாக்கத்தால் காஷ்மீரில் வீடுகளிலிருந்த மின்விசிறிகள், நாற்காலிகள் தானாக ஊசலாடியதால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதும் வெளியாகவில்லை.