மியாமி கடற்கரையில் மூழ்கத் தொடங்கிய படகில் சிக்கி தவித்த 32 பேரை அமெரிக்க கடலோர காவல்படையினர் மீட்டனர். 16 பேரை மட்டுமே ஏற்றி செல்லும் திறன் கொண்ட படகில் 32 பேர் பயணித்ததால் அதிக எடை காரணமாக படகு மூழ்க தொடங்கியது. இது குறித்து கடலோர காவல்படைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து மூழ்கிக்கொண்டிருந்த படகில் இருந்து 32 பேரையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.