அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், டோரி பின்ஸ் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த படகில் சுமார் 20 பேர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், டோரி பின்ஸ் கடற்கரையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் படகில் பயணித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மாயமான 9 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் படகில் பயணித்தவர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பலா? அல்லது அகதிகளா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.