ஈரான் நாட்டின் ஷிராஸ் நகரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 34 பேர் காயமடைந்தனர். 55 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர் பலத்த காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.