வார வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கின. மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 867 புள்ளிகள் வரை அதிகரித்து 81 ஆயிரத்து 109 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தியது. தேசிய பங்குசந்தை குறியீடான நிப்டியும் 247 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 582 புள்ளிகளில் வர்த்தகமானது. இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என்ற அறிவிப்பால் இந்திய பங்குசந்தைகளில் புத்துணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதானி துறைமுகம் நிறுவனம், மாருதி சுஸுகி, இந்தஸ் இந்த் வங்கி உள்ளிட்டவற்றின் பங்குகள் விலை உயர்ந்தன.நெஸ்லே, டைட்டன் உள்ளிட்டவற்றின் விலை சரிந்த து.