சந்தைகள் கடும் வீழ்ச்சி : ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் மோதலால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை இரண்டுமே கடுமையாக சரிந்து வர்த்தகமாகி வருகிறது. வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 1100 புள்ளிகள் குறைந்தும் நிஃப்டி 24,900 கீழ் குறைந்தும் வர்த்தகமாகின. இது பங்கு சந்தை முதலீட்டார்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்களால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததன் காரணமாக பங்கு சந்தைகள் சரிவை நோக்கி செல்வதாக கூறிய நிபுணர்கள், வரும் நாட்களில் மேலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். Related Link தங்கம் விலையில் லேசான சரிவு