கர்நாடகா மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதிகளை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடர் மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி சுரேந்தர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்தது. இதனை ஏற்று இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் விரைவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.