சிறைகளில் புதிய கைதிகளை அனுமதிக்கும் போது சாதி தொடர்பான தகவல்களை கேட்கக் கூடாது என்றும், கைதிகளை சாதி ரீதியாக வகைப்படுத்தக் கூடாது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. தமிழ்நாடு சிறை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிறை ஆவணங்களில் எந்த இடத்திலும் சாதி தொடர்பான தகவல்கள் இருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.