பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டத்திருத்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் தராமல் விசாரித்து இருப்பது முறையற்றது, நியாயமற்றது, அநீதியானது என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. மேலும், விசாரணையை ஒத்திவைத்தால் வானம் இடிந்து விழுந்து விடாது என்று மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆட்பசேபனை தெரிவித்தார்.