சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 169 நபர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். காவல்துறை சார்பில் 115 நபர்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 36 நபர்களுக்கும், பால்வளத்துறை சார்பில் 18 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 38 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 தோழி விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்து, 176 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 14 தோழி விடுதிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.