இந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழை,இந்த முறை மே மாதமே தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும், தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகளில் வரும் மே 13ஆம் தேதி பருவமழை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.