தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 299 கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.