தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, கடலூர், நீலகிரி, திண்டுக்கல், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.