சென்னையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தாழ்தள மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் நவீன வசதிகளுடன் கூடிய 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை மொத்த விலை ஒப்பந்த மாதிரி முறையில் இயக்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.