2025-2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பின் படி கல்லூரி மாணவர்களுக்கான மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் கோரியுள்ளது. தமிழக அரசு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியுள்ளதாகவும், ஒவ்வொரு மடிக்கணினியும் 20 அயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் தரமானதாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கணினி 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஹார்ட் டிஸ்க், 15.6 இன்ச் திரை கொண்டதாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.