கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் முறையாக விதிமுறைகளை கடைப்பிடிக்கிறதா? என்பதை கண்காணிக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தயாரிப்பு உபகரணங்கள், மூலப் பொருட்கள் மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது