தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் நாய்களுக்கு கருத்தடை செய்வது, காப்பகத்துக்கு மாற்றுவது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.