சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 8 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 40 மாத காலமாக, மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக கூறி தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.